14 நாட்கள் நாட்டை முடக்குமாறு ஜனாதிபதிக்கு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி கடிதம்!

You are currently viewing 14 நாட்கள் நாட்டை முடக்குமாறு ஜனாதிபதிக்கு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி கடிதம்!

14 நாட்களுக்கு நாட்டை முற்றாக முடக்குமாறு கோரி கொரோனா கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே 14 நாட்கள் முழுமையான சமூக முடக்கலை அல்லது முழு ஊரடங்கை அமுல்படுத்தமாறு அரச மருத்தவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் (SLMA), வைத்திய நிபுணர்கள் சங்கம் (AMS) உள்ளிட்ட 4 முக்கிய மருத்துவ சங்கங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தள்ளன. இந்நிலையில் நாட்டை முடக்குவது குறித்து ஆராய விசேட கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் எஸ். முனசிங்க தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். எனினும் நாட்டை முழுமையான முடக்குவது குறித்து இப்போது என்னால் எதுவும் கூற முடியாது எனவும் அவா் கூறியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments