16 அகவையுடைய யுவதியை காணவில்லை!

You are currently viewing 16 அகவையுடைய யுவதியை காணவில்லை!

கனடா – ஒன்ராறியோ மாகாணம், ரொரண்டோவில் வசித்துவரும் 16 வயதான தரணிதா ஹரிதரன் என்ற இளம் பெண் காணாமல் போயுள்ள நிலையில் அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அறியத்தருமாறு ரொரண்டோ பொலிஸார் கோரியுள்ளனர்.

தரணிதா ஹரிதரன் கடைசியாக நேற்று 29 வியாழக்கிழமை கனேடிய நேரப்படி மதியம் 1 மணிக்கு, டப்ஸ்கொட் வீதி மற்றும் மெக்லெவின் அவென்யூ ( Tapscott Road and McLevin Avenue area) பகுதியில் காணப்பட்டார்.

5.5 செ.மீ. உயரமுடைய அவா், மெல்லிய உடல்வாகும் நீண்ட கருப்பு முடியும் கொண்டவர். இடது கையில் பச்சை குத்தியுள்ளார். காதில் இரண்டு தோடுகள் குத்தியுள்ளார்.

காணாமல் போன அன்று தரணிதா ஹரிதரன் நீல நிற ஸ்வெட்டர், கருப்பு நீளக் காற்சட்டை அணிந்திருந்தார்.

காணாமல் போயுள்ள இந்தப் பெண் குறித்து தாம் கரிசனை கொண்டுள்ளதாக ரொரண்டோ பொலிஸார் தெரவித்துள்ளனர்.

இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 416-808-4200 என்ற தொலைபேசி எண்ணுக்கோ அல்லது www.222tips.com என்ற இணைய முகவரிக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபர் குறித்தும் 9-1-1 இலக்கத்துக்கோ அல்லது அவசரகால இலக்கமான 416-808-2222 என்ற எண்ணுக்கோ உடனடியாக முறைப்பாடு செய்யலாம். ஒருவர் காணாமல் போனால் முறைப்பாடு அளிக்க 24 மணிநேரங்கள் காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் ரொரண்டோ பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments