24 வயதுடைய இளைஞர், முன்னாள் அதிபர் உட்பட 03 பேர் யாழ்.குடாநாட்டில் மரணம்!

You are currently viewing 24 வயதுடைய இளைஞர், முன்னாள் அதிபர் உட்பட 03 பேர் யாழ்.குடாநாட்டில் மரணம்!

யாழ்ப்பாணத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர், பாடசாலை ஒன்றின் முன்னாள் அதிபர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 24 வயதுடைய எட்மன் ஜெரன்ஸ் என்பவர், மற்றும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உயிரிழந்த 68 வயதுடைய V.சின்னப்பிள்ளை ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை,

யாழ்ப்பாணம் கோண்டாவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் செல்வி பா.மார்க்கண்டு என்பவரும் உயிரிழந்துள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,

யாழ்.மாவட்டத்தில் 53 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 109 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 443 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம் வருமாறு,

யாழ். மாவட்டத்தில் பேர் 53 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 16 பேர்,

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 10 பேர்,

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 08 பேர்,

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

இளவாலை பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலில் ஒருவர்,

வவுனியா மாவட்டத்தில் 25 பேர்

வுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 07 பேர்,

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 07 பேர்,

பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பேர்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 பேர்

மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 16 பேர்,

காங்கேசன்துறை கடற்படை முகாமில் 04 பேர்,

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments