250 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பெருவில் 27 பேர் பலி!

You are currently viewing 250 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பெருவில் 27 பேர் பலி!

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பயணம் செய்த பேருந்து 250 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 27 பேர் பலியாகினர். 13-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் அயாகுசோ நகரில் இருந்து ஆரிகுப்பா நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்த பேருந்து அதிகாலை 3 மணியளவில் பெருவியன் என்ற பகுதியில் 250 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர், தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சடலங்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

இந்த விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்த விசாரணைகளை காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments