3வது நாளாக தொடர்கிறது நீதிக்கான ஈருருளிப்பயணம்!

You are currently viewing 3வது நாளாக தொடர்கிறது நீதிக்கான  ஈருருளிப்பயணம்!

இன்றோடு தொடர்ச்சியாக 3 ஆம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் லிபொன் (பெல்சியம்)எனும் இடத்தை வந்தடைந்தது. வரும் பாதைகளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனுக்கள் அரசியற் சந்திப்பின் ஊடாக கையளிக்கப்பட்டது ,

3வது நாளாக தொடர்கிறது நீதிக்கான ஈருருளிப்பயணம்! 1

அத்தோடு நமூர் மாநகர சபையில் இன்று மனு கையளிக்கப்பட்டு தொடர்ச்சியாக லக்சாம்பூர்க் நாட்டினை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது. பனிப்பொழிவு மற்றும் புவியியல் சவால்களுக்கு மத்தியில் தமிழர்களுக்கே உரித்தான விடுதலை ஓர்மத்தோடு மனித நேயப்போராளிகள் பயணித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

3வது நாளாக தொடர்கிறது நீதிக்கான ஈருருளிப்பயணம்! 2

அத்தோடு செல்லும் பாதைகளில் சந்திக்கும் பல்லின மக்கள் மத்தியிலும் தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட இனவழிப்பு பற்றியும் , அனைத்துலக சுயாதீன விசாரணை , மற்றும் தமிழர்களுக்கு தமிழீழமே தீர்வு .. மற்றும் பல கோரிக்கைகளையும் விழிப்புணர்வூட்டி வருகின்றார்கள்.

3வது நாளாக தொடர்கிறது நீதிக்கான ஈருருளிப்பயணம்! 3

நாளை மீண்டும் தொடர இருக்கும் ஈருருளிப் பயணத்திற்கு மாவீரரே துணை நின்று இயற்கையும் வழி காட்டும் எனும் நம்பிக்கையில் வரும் 09.03.2020 அன்று ஐ.நா முன்றலில் பி.ப 2 மணிக்கு நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு பேரணி நோக்கி விரைகின்றது. தமிழினத்திற்கு நீதி கேட்டு அனைத்து தமிழ் உறவுகளையும் நடக்க இருக்கும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொள்ளும் அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம். நன்றி தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

3வது நாளாக தொடர்கிறது நீதிக்கான ஈருருளிப்பயணம்! 4
3வது நாளாக தொடர்கிறது நீதிக்கான ஈருருளிப்பயணம்! 5
3வது நாளாக தொடர்கிறது நீதிக்கான ஈருருளிப்பயணம்! 6
பகிர்ந்துகொள்ள