46 கிலோ கஞ்சா பொதிகள் பேசாலையில் மீட்பு!

You are currently viewing 46 கிலோ கஞ்சா பொதிகள் பேசாலையில் மீட்பு!

மன்னார் – பேசாலை 4ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் செவ்வாய்க்கிழமைமாலை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் 46 கிலோ கிராம் எடை கொண்டது என சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள