50 வயதிற்குட்பட்ட 11 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் : கொரோனா வைரஸ்!

  • Post author:
You are currently viewing 50 வயதிற்குட்பட்ட 11 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் : கொரோனா வைரஸ்!

இந்த வாரம் செவ்வாயன்று தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் 11 பேர் 50 வயதிற்குட்பட்டவர்கள் என்று நோர்வே தீவிர சிகிச்சைப் பிரிவு (NIF) அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளில் இருவர் 24 வயதுக்குட்பட்டவர்கள்.

மார்ச் 17 ஆம் திகதி மொத்தம் 34 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளில் 22 பேருக்கு புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் பிற இருதய, நுரையீரல் நோய்கள் போன்ற கூடுதல் நோய்கள் இருந்துள்ளன.

வயது அடிப்படையில் நோயாளிகள்:

  • 0-24 வயது: 2 நோயாளிகள்
  • 25-49 வயது: 9 நோயாளிகள்
  • 50-75 வயது: 18 நோயாளிகள்
  • 75 வயதிற்கு மேற்பட்டவர்கள்: 5 நோயாளிகள்

கொரோனா நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 26 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் 16 நோயாளிகள் சுவாசக் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளார்கள் என்று செவ்வாய் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 104 நோயாளிகள் கொரோனா வைரஸ் தோற்றால் நோர்வே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள