6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்!

You are currently viewing 6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்    கடந்த 17.02.2023   காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக ஆரம்பித்து ,பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர்  ஐ . நா நோக்கி ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டதோடு,சம நேரத்தில்  தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி   நெதர்லாந்திலிருந்தும்   மனித நேய ஈருருளிப்பயணம்   ஆரம்பமாகியிருந்தது.

இந்த   மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் டென் ஹாக்  நகரில் அமைந்துள்ள  அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்  ( International Criminal Court)    முன்பாக  கனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று, பெல்சியம் நோக்கி  பயணித்து,புரூசல் மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றின்முன் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் ஈருருளிப்பயணம் தொடர்ந்தும் பயணித்து நாமன் என்ற இடத்தில் நிறைவுபெற்றது.இன்று காலை நாமன் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகி, லக்ஸ்சம்பேர்க் நோக்கி ஈருருளிப்பயணம் பயணித்து காவாய் என்ற கிராமத்தில் மாலை நிறைவு பெற்றது.இப்போராட்டத்தில் வேற்றின இளையோர் ஒருவரும் இணைந்து பயணிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (22.02.2023)காலை அகவணக்கத்துடன் ஆரம்பமான போராட்டம் பெல்ஜியம் காவாய் என்ற கிராமத்திலிருந்து,ஈருருளிப்பயணப் போராட்டம் பெல்ஜியத்தில் உள்ள மற்றுமொரு நகரமாகிய அர்லோன்(Belgiem Arlon) நகரத்தை அடைந்து அங்கு மாநகரசபை முதல்வரைச் சந்தித்து தமிழின அழிப்புச் சம்பந்தமான மனுவைக் கையளித்தது .பின்பு லுக்ஸ்சம்பூர்க்(Luxemburg) எல்லையை வந்தடைந்த ஈருருளிப்பணப் போராட்டம் யேர்மனி நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.ஜேர்மனூடாக பிரான்ஸ் சென்று ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக சுவிஸ் நாட்டிற்குள் சென்று .06.03.2023 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையை சென்றடையவுள்ளது.

ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் அறவழிப்போராட்டக்கார்ர்களை ஒவ்வொரு நாட்டு மக்களும் வரவேற்று, உணர்வெழுச்சியுடன் தங்களது ஆதரவினை வழங்குவதோடு, இப்போராட்டங்களில் இணைந்து கொள்ளுவதும் காலத்தின் கடமையென்பதை உணர்ந்து பயணிப்போம்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

என்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா அரசியல் எழுச்சியினை உளமேற்று பயணிப்போம்.

“இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது”

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்! 1
6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்! 2
6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்! 3
6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்! 4
6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்! 5
6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்! 6
6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்! 7
6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்! 8
6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்! 9
6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்! 10
6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்! 11
6 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்! 12
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments