A9 வீதியில் கோர விபத்து-இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு!

You are currently viewing A9 வீதியில் கோர விபத்து-இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு!

யாழ்.கொடிகாமம் A 9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர்  சம்பவ இடத்தில் பலியாகினர்.


டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன் நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இயக்கச்சி பகுதியை சேர்ந்த த.சாந்தன் (வயது22), க.கஜீபன்(வயது18) அகிய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள