Ahus மருத்துவமனை : பணியாளர்கள் மீண்டும் பணிகளுக்கு திரும்புகின்றனர்.

You are currently viewing Ahus மருத்துவமனை :   பணியாளர்கள் மீண்டும் பணிகளுக்கு திரும்புகின்றனர்.

மார்ச் 23ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து 768 Ahus மருத்துவமனைப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் இந்த வாரம் புதன்கிழமையில் இருந்து இந்த எண்ணிக்கை 250 ஆக குறைவடைந்தது . மேலும் அடுத்த வாரத்தில் 80 பேர் மீண்டும் பணிக்கு வர தயாராக உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மற்றும் பலருக்கு தனிமைப்படுத்தல் முடிவடைந்ததால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பணிகளில் சோதனை செய்வதிலும் .தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும் சேர்ந்து நாம் சிறப்பாக பணியாற்றி உள்ளோம் என்று மனிதவள இயக்குனர் யான் இங் பீட்டர்சன் ( Jan Inge Pettersen) தெரிவித்துள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தலில் பலர் வெளியில் இருந்து வந்ததால்தான் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இதுவரை 900 ஊழியர்கள் சோதனை செய்யப்பட்டும் உள்ளனர் . மேலும் அனைவரும் மீண்டும் பணிகளுக்கு திரும்புவது மிகவும் முக்கியமானது என்றும் பீட்டர்சன் கருத்து வெளியிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள