ECUADOR : குவாயாகில் (Guayaquil) நகரில் கிட்டத்தட்ட 800 பேர் பலி!

  • Post author:
You are currently viewing ECUADOR : குவாயாகில் (Guayaquil) நகரில் கிட்டத்தட்ட 800 பேர் பலி!

ECUADOR, குவாயாகில் (Guayaquil) நகரில் உள்ள வீடுகளில் இருந்து இறந்த 800 சடலங்களை காவல்துறையினர் அகற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வெடிப்பின் பின்னர் நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, இதுவரை 333 கொரோனா இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அதிக இருள் எண்ணிக்கை குறித்த அச்சங்களும் உள்ளன.

ஈக்வடாரின் (Ecuador) மிகப்பெரிய நகரமான குவாயாகில் (Guayaquil) கொரோனா தொற்று மையமாக உள்ளது.

கொரோனா தொற்றானது அவசர சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் உடல் அடக்க சேவை நிறுவனங்கள் ஆகியவற்றிட்கு அதிக சுமைகளை ஏற்படுத்தியுள்ளது என்றும், குடியிருப்பாளர்கள் தங்கள் தெருக்களில் கைவிடப்பட்டு கிடந்த இறந்தவர்களின் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள