“Norway Cup” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் இரத்து!

You are currently viewing “Norway Cup” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் இரத்து!

உலகின் மிக அதிகமான பங்காளர்கள் கலந்துகொள்ளும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டித்தொடரான “Norway Cup” இவ்வருடமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம், “கொரோனா” சூழ்நிலை காரணமாக இரத்துச்செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வருடமும் போட்டிகள் இரத்தாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இளவயதினரை மையப்படுத்தி நோர்வேயில் நடத்தப்பட்டு வரும் இவ்விளையாட்டுத்தொடரில் உலகெங்கிலுமிருந்து மிக அதிகமான பங்குபற்றாளர்கள் கலந்துகொள்வதும், குறித்த இப்போட்டித்தொடர் நோர்வேயின் கௌரவமான விடயங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டு, இப்போட்டித்தொடர் ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்கள் நிறைவுகாண இருப்பதால், 2022 ஆம் ஆண்டில் இப்போட்டிகள் தடையில்லாமல் நடைபெறுமென தாம் நம்புவதாக, ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments