ஆசிரியரால் மாணவிகளுக்கு தொந்தரவு: முறைப்பாடு செய்த மாணவி பாடசாலையிலிருந்து வெளியேற்றம்!

You are currently viewing ஆசிரியரால் மாணவிகளுக்கு தொந்தரவு: முறைப்பாடு செய்த மாணவி பாடசாலையிலிருந்து வெளியேற்றம்!

யாழ். வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், மாணவிகள் சிலரைப் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் எனவும், இது தொடர்பில் அதிபரிடம் முறையிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயர்தர வகுப்பில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் பெற்றோரும் அதிபரிடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து மாணவியை வேறு பாடசாலைக்கு மாற்றுவதென்றால் மாற்றுங்கள் என பெற்றோரிடம் அதிபர் குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பாடசாலையில் இருந்து மாணவி வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments