இந்திய தூதுவர்களை கடந்த 15 வருடங்களாக சந்தித்து என்ன பலன்?

You are currently viewing இந்திய தூதுவர்களை கடந்த 15 வருடங்களாக சந்தித்து என்ன பலன்?

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இலங்கையின் தற்கால அரசியல் நிலவரம், வடக்கு, கிழக்கு அடங்கலாக இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள், பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களை மையப்படுத்திய விடயங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிராந்திய மக்களுக்காக இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா இதன்போது வலியுறுத்தியுள்ளார் என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் இந்தியாவின் சுய அரசியலை தாண்டி தமிழர்களுக்கு ஒரு தீர்வையும் இந்தியா தரப்போவதில்லை என தெரிந்தும் நாம் மாறி மாறி இந்திய தூதுவர்களை கடந்த 15 வருடங்களாக சந்தித்து என்ன பலன்? என மக்கள் விசனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments