இன்று வடகிழக்கில் நீரில் மூழ்கி சிறுவர் மூவர் பலி!

You are currently viewing இன்று வடகிழக்கில் நீரில் மூழ்கி சிறுவர் மூவர் பலி!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர் நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்இ

குறித்த இரு சிறுவர்களும் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர் நிலையில் அவர்களது சடலங்கள் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.

இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக நீர் நிலையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

திருகோணமலை – மூதூர் புதிய இறங்குதுறை வீதியிலுள்ள களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மூதூர் – அக்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய இர்பான் இபாம் என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த களப்புக் கடலில் மூன்று சிறுவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனயடுத்து, குறித்த களப்பு கடல் வீதியால் சென்றவர்கள் மூன்று சிறுவர்களையும் பிரயத்தனம் மேற்கொண்டு காப்பாற்ற முயற்சித்தபோதும் இரண்டு சிறுவர்களை காப்பாற்ற முடிந்ததோடு, குறித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுவனின் ஜனஸா தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments