காஸாவின் அல் -அவ்டா வைத்தியசாலை இஸ்ரேலிய படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் முகமட் சல்ஹா தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை முழுமையான முற்றுகையின் கீழ் உள்ளது, வெளியிலிருந்து நோயாளர்களை உள்ளே எடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என முகமட் சல்ஹா தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமானம் ஒன்று வைத்தியசாலையை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளது,டாங்கிகளின் துப்பாக்கி பிரயோகத்தையும் கேட்க முடிகின்றது 400-500 மீற்றர் தொலைவில் இது இடம்பெறுகின்றது என்பதோடு வைத்தியசாலையின் நிலைமை மிக மோசமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தடைகள் காரணமாக மருத்துவபொருட்கள் போதாமையினால் இந்த வைத்தியசாலை இயங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.