உயிர் துறந்த தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர ஏற்பாடு!

You are currently viewing உயிர் துறந்த தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர ஏற்பாடு!

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் உயிர் துறந்த தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது, தமிழின வரலாற்றில் என்றுமே மறக்கமுடியாத ‘வெலிக்கடை சிறைப் படுகொலை’ இடம்பெற்ற தினமான இன்று மாலை 3.05 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள ‘தந்தை செல்வா கலையரங்கில்’ ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

சமூகத்தின் பெயரில் இலங்கை சிறைகளுக்குள் இரையாக்கப்பட்ட எமது உறவுகளை உணர்வுபூர்வமாக நினைவுகூரும் இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் அரசியல் கைதிகள், சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவ மற்றும் ஆசிரியர் சமூகத்தினர், ஊடகத்துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளுமாறு ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு அழைப்பு விடுக்கிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments