எழுதுமட்டுவாழ் பகுதியில் வாகனம் தடம்புரண்டு விபத்து! எண்மர் காயம்!

You are currently viewing எழுதுமட்டுவாழ் பகுதியில் வாகனம் தடம்புரண்டு விபத்து! எண்மர் காயம்!

எழுதுமட்டுவாழ் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் எண்மர் காயம் அடைந்துள்ளனர்.

கிளிநொச்சி நோக்கிய திசையில் பயணித்த சிறிய கன்ரர் ரக வாகனமே தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனம் அதிவேகமாகச் சென்றமையே விபத்துக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த எண்மரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் படுகாயம் அடைந்த ஐவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments