கனகராயன் குளம் விபத்தில் இளைஞன் பலி!

You are currently viewing கனகராயன் குளம் விபத்தில் இளைஞன் பலி!

ஏ9 வீதியில் கனகராயன்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியின் 222 ஆவது கிலோமீற்றர் பகுதியில் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவரே உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் நகரில் உள்ள வவுனியா வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றி வருகின்ற 21 வயதுடைய சாள்ஸ் வினோத் என்ற ஊழியர் பணிமுடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் கனகராயன்குளம் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments