கரைவலை தொழிலில் ஈடுபட்டவர் கடலில் மூழ்கி மரணம்!

You are currently viewing கரைவலை தொழிலில் ஈடுபட்டவர் கடலில் மூழ்கி மரணம்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலே நேற்றுக் காலை கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் திடீரென கடலுக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிவனு சிவகுமார் என்பவராவார்.

குறித்த நபரின் சடலத்தை நேற்று மாலை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி உடல் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்

தற்போது சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments