சிங்கள அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அணிதிரண்ட தமிழர்கள்!

You are currently viewing சிங்கள அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அணிதிரண்ட தமிழர்கள்!

தமிழர்களின் பொருளாதாரத்தை உறுதிசெய்ய, தமிழர்  நிலத்தை  மீட்டெடுக்க  மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையை மீட்டு தருமாறு கோரி பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று நூறாவது நாளாகவும் தொடர்கின்றது.

இதனை முன்னிட்டு சித்தாண்டி முருகன் ஆலய வளாகத்தில் இருந்து போராட்டம் இடம்பெறும் பகுதி வரை இன்றைய தினம் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாதவனை மற்றும் மயிலத்தமடு மேச்சல் தரை  சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிரான பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர்    பங்கேற்றனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments