சீனாவின் மிக மோசமான நிலநடுக்கம்: 148 பேர் பலி!

You are currently viewing சீனாவின் மிக மோசமான நிலநடுக்கம்: 148 பேர் பலி!

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்கு முன் சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Gansu, Qinghai மாகாணங்களில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் இது 6.2 புள்ளிகளாக பதிவானது. வானிலை மைய அதிகாரிகள் இந்த நிலநடுக்கம் தென் சீனக்கடலுக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் உருவானதாக தெரிவித்திருந்தனர்.

இதில் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த நிலையில் நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gansu-வில் 117 பேரும், Qinghai-யில் 31 பேரும் பலியானதாகவும் மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இரு மாகாணங்களிலும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் 1,39,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments