ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு!

You are currently viewing ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு!

breaking

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புக் கொடி காட்டப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியா வைத்தியசாலை மற்றும் மாவட்ட செயலகம் என்பவற்றுக்கு நேற்று  (26.05.2024) பிற்பகல் வருகை தந்த நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தை சேர்ந்த தாய்மார் சிலர் ஜனாதிபதியின் வருகைக்கு கறுப்பு கொடி காட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அங்கு மேலதிக பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு குறித்த தாய்மாரை வீதிக்கு வரவிடாது தடுக்கப்பட்டிருந்தனர்.

இதன் பின் மாவட்ட செயலக வாயிலுக்கு செல்ல முற்பட்ட தாய்மாரை பொலிஸார் வழிமறித்து அங்கிருந்து அவர்களை வெளியேற்றியுள்ளனர்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments