தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்காக பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்!

You are currently viewing தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்காக பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்!

அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று வவுனியாவில் நேற்று உருவாக்கப்பட்டது.

தமிழர் பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் நெருக்கடிகள் மற்றும் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது, தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் ஒன்று வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வினையாற்றுவதற்காக இரு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், வனவளத் திணைக்களத்தால் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை, தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பான தரவுகளை சேகரித்து அவற்றை துல்லியமாக இனம் காண்பதற்காக 7 பேர் கொண்ட கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

அத்துடன் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக வடகிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் சாத்வீகப்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக மற்றொரு கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மதகுருமார்கள்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் அரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலை கழகம்,  புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, ஜக்கிய தேசிய கட்சி, ஶ்ரீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் போன்ற அரசியல் கட்சிகளும், பொது அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

 

தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்காக பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்! 1

 

 

தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்காக பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்! 2

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments