தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர், மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

You are currently viewing தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர், மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் அவரது மகனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி முன்பாக நேற்றுமுன்தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சுகவீனம் காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் அவரது மகன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடுசெய்த குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments