திருகோணமலையில் நேற்றிரவு கோர விபத்து! – சிறுமி பலி.

You are currently viewing திருகோணமலையில் நேற்றிரவு கோர விபத்து! – சிறுமி பலி.
?????????????????????????????????????????????????????????

திருகோணமலை-உட்துறைமுக வீதியில் நேற்றிரவு வான் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி பயின்று வரும் திருமலை டொக்யாட் வீதி இணக்கம் 156/6 இல் வசித்து வரும் எட்ரிக் செர்லின் (09வயது) என்ற சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மோட்டார் சைக்கிளில் தாய், மகள் மற்றும் அவரது தம்பியின் மகள் ஆகியோர் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் எதிரே வந்த சொகுசு வானொன்று மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய தாயாருக்கு வழங்கப்பட்ட மாத்திரையை உட்கொண்ட போது குறித்த தாயாருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனக்குடா பகுதியில் இருந்து வானில் தாயாரை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வேகமாக கொண்டு செல்லும் வேளையில் எதிராக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகவும் இதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதே வேளை வழங்கப்பட்ட மாத்திரை ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலைக்கு வானில் ஏற்றி வந்த குறித்த தாய் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில் ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய ஐந்து வயது சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதானா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியை திருகோணமலை-துறைமுக சிறீலங்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments