துன்னாலையில் பெண்ணொருவர் கைது!

You are currently viewing துன்னாலையில் பெண்ணொருவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை மேற்கு பகுதியில், 37 வயதான பெண்ணொருவர், போதை பொருளுடன் நெல்லியடிப் சிறீலங்கா காவற்துறையினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து, 720 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், 23,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது.

குறித்த பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாமென சிறீலங்கா காவற்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த சிறீலங்கா காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதேவேளை நேற்றைய தினமும் துன்னாலை கிழக்கு பகுதியில் 51 வயதான பெண்ணொருவர் மற்றும் நெல்லியடி பகுதியில் இளைஞன் ஒருவர் ஆகிய இருவரும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில்  குறித்த இருவரையும் சிறீலங்கா காவற்துறை தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள, பருத்தித்துறை நீதவான் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments