அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக நடைபெறும் போராட்டம்!

You are currently viewing அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக நடைபெறும் போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான  போராட்டம்  நேற்று மாலை ஆரம்பமாகியுள்ளது. மக்களது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து, எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரையில் பௌர்ணமி தின வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு தென்பகுதியில் இருந்து பேரினவாத மக்கள் அழைத்து வரப்படுவது வழமை. அந்தவகையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இந்த போராட்டம் இன்று ஆரம்பமாகியது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை

யாழ். தையிட்டி பகுதியில் இன்றையதினமும் போராட்டம் முன்னனெடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply