நாகர்கோவிலில் கசிப்பு உற்பத்தி செய்தவர் கைது!

You are currently viewing நாகர்கோவிலில் கசிப்பு உற்பத்தி செய்தவர் கைது!

பருத்தித்திறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் பகுதியில் நீண்டகலமாக கசிப்பு உற்பத்தி விற்பனையில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (01)  கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாகர்கோவில் பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தி விற்பனையில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் பொலிஸாரின் கண்களில் இருந்து தப்பி வந்துள்ளார்.

இந்நிலையில் பருத்தித்திறை சிறீலங்கா காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் சென்ற பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் குறித்த சந்தேக நபரது வீடு சுற்றிவளைத்து, சந்தேக நபரை கைது செய்ததுடன் கசிப்பு மற்றும் கோடா என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், சான்று பொருட்களும் இன்று  செவ்வாய்க்கிழமை (02) மன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக  பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறை நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments