பளை – முகமாலை பகுதியில் இன்று அகழ்வுப் பணி!

You are currently viewing பளை – முகமாலை பகுதியில் இன்று அகழ்வுப் பணி!

பளை – முகமாலை பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில், இன்று மேலதிக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புகளுடன் சீருடையையும் கண்டெடுத்திருந்தனர். இதுபற்றி அவர்கள் பளை பொலிஸில் முறைப்பாடளித்ததையடுத்து, பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தினர்.

கிளிநொச்சி நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் குறித்த இடத்தில் மேலதிக அகழ்வு பணிகளை இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments