பூப்புனித நீராட்டுவிழாவில் புகுந்த கொள்ளையர் – வாள் வெட்டு. நகைகளும் கொள்ளை; மூவர் படுகாயம்!

You are currently viewing பூப்புனித நீராட்டுவிழாவில் புகுந்த கொள்ளையர் – வாள் வெட்டு. நகைகளும் கொள்ளை; மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் வடமராட்சியின் மாக்கிரான் பகுதியில் இன்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை வாளால் வெட்டி படுகாயப் படுத்தியதுடன் அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் ஆண்கள் இருவரும் பெண் ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னரேயே குறித்த வீட்டில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றிருந்தாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டார் அணிந்திருந்த நகைகளே கொள்ளையர்களால் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments