மணற்காட்டில் 31 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது!

You are currently viewing மணற்காட்டில் 31 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் – மணற்காட்டு பகுதியில் 31 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் கஞ்சா பொதிகளை இளைஞன் ஒருவர் பதுக்கி வைப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிறீலங்கா இராணுவத்தினர் , கஞ்சா பொதிகளுடன் இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் 31 கிலோ நிறையுடையது எனவும் , கைது செய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை சிறீலங்கா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments