மன்னாரில் நேற்று முன்தினம் பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான்பாய ஆரம்பித்துள்ளது. பாலியாறு பெருக்கெத்துப் பாய்கிறது.
குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்களும் முழுவதுமாக வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயளாலர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி மற்றும் மாந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வயல் நிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் கடும் மழைகாரணமாக ஜீவபுரம்,ஜிம்ரோன் நகர்,சாந்திபுரம் போன்ற கிராமங்களும் தீவுக்கு வெளியில் தேத்தாவாடி,தேவன் பிட்டி,மூன்றாம் பிட்டி போன்ற கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளது.
தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பட்சத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
![மன்னார் மற்றும் கிளிநொச்சியில் பெருக்கெடுக்கும் மழை வெள்ளம்! 1](https://www.seithy.com/siteadmin/upload/mannar-flood-161223-seithy%20(1).jpg)
![மன்னார் மற்றும் கிளிநொச்சியில் பெருக்கெடுக்கும் மழை வெள்ளம்! 2](https://www.seithy.com/siteadmin/upload/mannar-flood-161223-seithy%20(2).jpg)
![மன்னார் மற்றும் கிளிநொச்சியில் பெருக்கெடுக்கும் மழை வெள்ளம்! 3](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2023/12/kili-300x200.jpg)
இதனால், முரசுமோட்டை, ஐயன்கோயில், பன்னங்கண்டி, கண்டாவளை பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக செயற்படுமாறு இரணைமடு குளத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் சத்தியசீலன் செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.