மயிலத்தமடு – மாதவனை போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் விடுதலை!

You are currently viewing மயிலத்தமடு – மாதவனை போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் விடுதலை!

மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல்த்தரை சிங்கள ஆக்கிரமிப்பிற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05ஆம் போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (03.06.2024) ஏறாவூர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறிலங்கா காவல் துறை போதிய சாட்சியங்களை முன்வைக்கத் தவறியமை, குற்றப்பத்திரிகையில் காணப்பட்ட முரண்பாடு, மேலும் குற்றச்சாட்டுக்களை முன்கொண்டு செல்வதற்கான எவ்வித முகாந்தரங்களும் இல்லை மற்றும் போராடுவது மக்களின் உரிமை என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்கள் 06 பேரும் ஏறாவூர் நீதிமன்றத்தினால் விடுதலை இன்றைய தினம் செய்யப்பட்டனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments