மாங்குளத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மாற்றுத் திறனாளி திடீர் மரணம்!

You are currently viewing மாங்குளத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மாற்றுத் திறனாளி திடீர் மரணம்!

முல்லைத்தீவு – மாங்குளம் செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஆண் மாற்றுத்திறனாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியில் பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வாந்தி எடுத்ததாகவும், சாரதியும் வர்த்தகர் ஒருவரும் அவரை இறக்கியுள்ளனர். இந்த நிலையில் 1990 இலக்க நோயாளர் காவு வண்டியில் ஏற்ற அழைத்த போது அவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டது.

குறித்த நபர் மட்டக்களப்பு களவாஞ்சிக்குடி பகுதியை சேர்ந்த 51 வயதுடைய பெருமாள்சாமி சந்திரகுமார் எனும் ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments