மாங்குளம் பகுதியில் செயற்பாட்டாளர் இருவரை கொலை செய்ய முயன்ற நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்!

You are currently viewing மாங்குளம் பகுதியில்  செயற்பாட்டாளர் இருவரை கொலை செய்ய முயன்ற நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்!

மாங்குளம் பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் இருவரை கொலை செய்ய முயன்ற நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் 02 மணியளவில் மாங்குளம் நகரப்பகுதியிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு சென்ற ஒருவர் கிந்துஜனின் வீட்டிற்கு செல்ல வேண்டுமெனக்கூறி முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு பிடித்துள்ளார். அவரின் நடத்தையில் சந்தேகமடைந்த சாரதி எதற்காக செல்கிறீர்கள் என கேட்டபோது அவருக்கு Surprise gift delivery செய்ய வேண்டுமெனக்கூறியுள்ளார்.

சற்று நேரத்தில் அவர் தன்னை உருமறைப்பதற்காக ஒட்டியிருந்த தாடி உரிந்துள்ளது. இதையடுத்து அவர் தப்பியோடி வீதியால் வந்த இ.போ.ச பேருந்தில் ஏறமுயற்சித்த போது அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒன்றரை அடி நீள வாள், கயிறு மற்றும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவரை விசாரித்ததில் அவர் பிறேம் மற்றும் கிந்துஜனை கொல்லவந்ததாக கூறியுள்ளார். அதனையடுத்து அவர் மாங்குளம் சிறீலங்கா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். நாளை நீதிமன்றில் முற்படுத்த சிறீலங்கா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments