முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு கைது விவகாரம் : கண்டனம் வெளியிட்டுள்ள அருட்தந்தை மா.சத்திவேல் !

You are currently viewing முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு கைது விவகாரம் : கண்டனம் வெளியிட்டுள்ள அருட்தந்தை மா.சத்திவேல் !

 

திருகோணமலை (Trincomalee) சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கிய நிகழ்வு ஏற்பாட்டாளர்களை கைது செய்தமை தொடர்பில் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் (M. Satthivel) கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இவரால் இன்று (13.05.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உப்பு கஞ்சி பகிர்வோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்திருக்கையில் சம்பூர் பொலிஸார் கஞ்சி பகிருதலை தடுப்பதற்காக மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவை பெற்றிருப்பதோடு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் என இதுவரை நால்வரை கைது செய்துள்ளனர்.

மக்கள் ஒன்று கூடுதல் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என காரணம் காட்டி உள்ளனர்.

இது கோவிட் காலத்தில் பயன்படுத்திய சொற்றொடராகும். இதனையே மீண்டும் நினைவேந்தலை தடுத்து நிறுத்தும் ஆயுதமாக கையில் எடுத்திருப்பது இறந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்.

சம்பூர் பொலிஸாரின் இத்தகைய அராஜக செயலை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு எதிர்வரும் விசாக பண்டிகையின் போது அதே தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி விசாக பண்டிகை நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவார்களா எனக் கேட்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு காரணமாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமாரையும் பாடசாலை மாணவி உட்பட பெண் சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுலை செய்ய வேண்டும்.

இத்தகைய கைதுகளால் நீதியை தடுத்து விட முடியாது என்பதை உறுதியாக கூறுகின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் நாம் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு உரையாடிய போது சாதகமான பதிலளித்தமை மகிழ்ச்சியே.

இ வ்வாறு பொலிஸ் நிலையத்தினரும் நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்கின்றோம். உப்பு கஞ்சியை சுதந்திரமாக குடிக்கவிடு எனும் மக்களின் நீதிக் குரலை, அரசியல் குரலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டிலாவது சர்வதேசத்தின் காதுகளுக்கு எட்டி விட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு” எனவும் அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments