கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பு செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இன்றையதினம் காலை முதல் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத் தொகுதியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
அதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் குருதிக்கொடை வழங்கினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் குருதிக் கொடையில் உணர்வுடன் பங்கேற்றனர்.
![முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவாக குருதிக் கொடைக்காக குவிந்த மாணவர்கள்! 1](https://www.seithy.com/siteadmin/upload/blood-donate-140524-seithy%20(2).jpg)
![முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவாக குருதிக் கொடைக்காக குவிந்த மாணவர்கள்! 2](https://www.seithy.com/siteadmin/upload/blood-donate-140524-seithy%20(3).jpg)
![முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவாக குருதிக் கொடைக்காக குவிந்த மாணவர்கள்! 3](https://www.seithy.com/siteadmin/upload/blood-donate-140524-seithy%20(5).jpg)
![முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவாக குருதிக் கொடைக்காக குவிந்த மாணவர்கள்! 4](https://www.seithy.com/siteadmin/upload/blood-donate-140524-seithy%20(6).jpg)