யாழில் இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கொடூர செயல்!

You are currently viewing யாழில் இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கொடூர செயல்!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மிருசுவில் கரம்பகத்தில் உள்ள தோட்டக் குடிலில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் வயது 43 என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை வழமையாக கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே இன்று காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் கொடிகாமம் சிறீலங்கா காவற்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments