யாழில் விபத்தில் படுகாயமடைந்த பல்கலைக்கழக மாணவன் பலி!

You are currently viewing யாழில் விபத்தில் படுகாயமடைந்த பல்கலைக்கழக மாணவன் பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நுவரெலியாவைச் சேர்ந்த 22 வயதான க.பிரதீசன் என்பவரே ஆவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்தியில்  (03-08-2023) மோட்டார் சைக்கிள் – வான் மோதி விபத்து ஏற்பட்டிருந்தது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பல்கலைக்கழக மாணவன் காடமடைந்து சுயநினைவற்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (04-08-2023) இரவு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை யாழ்ப்பாணம் சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments