யாழ்ப்பாணத்தில் கால் பங்கினருக்கு நீரிழிவு!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் கால் பங்கினருக்கு நீரிழிவு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 வீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் இ.மைக்கல் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்ற பாரம்பரிய உணவு கண்காட்சியில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்து செல்வதாக இ.மைக்கல் தெரிவித்துள்ளார்.

மேற்கத்தைய உணவு முறைகள், வெதுப்பக உணவுகள், மற்றும் அதிகளவு மாப்பொருட்களை கொண்ட உணவு முறைகள் காரணமாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமது முன்னோர்கள் பாரம்பரிய உணவுகளை உட்கொண்டதாலேயே நீரிழிவு போன்ற நோய்களிலிருந்து தப்பித்துக்கொண்டதாகவும் யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் இ.மைக்கல் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments