யாழ். நெடுந்தீவில் பயங்கரம் -5 பேரின் சடலங்கள் வெட்டுக்காயங்களுடன் மீட்பு!

You are currently viewing யாழ். நெடுந்தீவில் பயங்கரம் -5 பேரின் சடலங்கள் வெட்டுக்காயங்களுடன் மீட்பு!

யாழ். நெடுந்தீவில் பயங்கரம் -5 பேரின் சடலங்கள் வெட்டுக்காயங்களுடன் மீட்பு! 1

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் ஐவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், 3 பெண்களும் 2 ஆண்களுமே உயிரிழந்துள்ளனர் என சிறீலங்கா காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நெடுந்தீவு, மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றிலேயே இன்று காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் கூறியுள்ளனர்.

விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொலைசெய்யப்பட்டவர்களில் 2பேர் நெடுந்தீவை சேர்ந்தவர் 2பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் ஒரவர் வெளிநாட்டு வாழ் தமிழர் என தெரியவருவதோடு இரு பெண்களும் உள்ளடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments