வடமராட்சி கிழக்கில் 70 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

You are currently viewing வடமராட்சி கிழக்கில் 70 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

70 கிலோ கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் வடக்கு கடல் பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்படட கஞ்சாவின் பெறுமதி சுமார் 28 மில்லியன் ரூபாய் என கடற்படை தெரிவித்துள்ளது.

கேரள கஞ்சாவை டிங்கி படகில் ஏற்றிச் சென்ற போது  சிறீலங்கா கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை மற்றும் டிங்கி படகும் மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments