வல்லிபுரம் காட்டுக்குள் 60 கிலோ கஞ்சாவுடன் பதுங்கியிருந்தவர் கைது!

You are currently viewing வல்லிபுரம் காட்டுக்குள் 60 கிலோ கஞ்சாவுடன் பதுங்கியிருந்தவர் கைது!

வடமராட்சி- வல்லிபுரம் காட்டுப் பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கரவெட்டி யாக்கரு விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பருத்திதுறை, வல்லிபுரம் காட்டு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 02 சாக்குகளில் அடைக்கப்பட்ட ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 60 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது .

இதன் போது வத்திராயன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் , மீட்கப்பட்ட கஞ்சாவும் கைது செய்யப்பட்டவரும் பருத்தித்துறை சிறீலங்கா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments