வவுனியா – செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பொருளாதார நெருக்கடியால் 931 குழந்தைகள் பாதிப்பு!

You are currently viewing வவுனியா – செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பொருளாதார நெருக்கடியால் 931 குழந்தைகள் பாதிப்பு!

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பொருளாதார நெருக்கடி காரணமாக 6465 குடும்பங்களும், 931 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் கேட்கப்பட்ட போதே அவர் அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும், பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 6465 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

அத்துடன், 931 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 213 கர்ப்பிணித் தாய்மாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments