அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை !

You are currently viewing அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை !

காசாவில்(Gaza) இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல்(Israel) தயாராகி வருகின்ற நிலையில் கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவில் தற்போது 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்ற நிலையில் இஸ்ரேல் இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையால் அவர்கள் பீதி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலின் குறித்த நடவடிக்கைக்கு

ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை  38 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments