அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞனை குத்திக்கொன்ற நபர்!

You are currently viewing அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞனை குத்திக்கொன்ற நபர்!

மட்டக்களப்பு, கொக்குவில் சிறீலங்கா காவற்துறை பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் வீதியால் சத்தமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று  கொக்குவில் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தங்கேஸ்வரன் அபிலாஸ் என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொக்குவில் சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments