தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பாதை, தமிழ்த் தேசியத்துக்கு முரணாக உள்ளதெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பதைப் போன்றே கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த ஏனைய கட்சிகளையும் எதிர்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் திட்டங்களை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ள தயாராகுவதாகவும் கூறியுள்ளார்.