அனுர அரசு இனவாதமற்ற அரசு என இன்னமும் நம்புவோர் இந்த அநீதியைக் கவனத்தில் கொள்க!
தென் தமிழீழம் , திருகோணமலையில் தமிழர் தாயகத்தை திட்டமிட்டு பௌத்தமயமாக்கும் நோக்கில் பெரியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் பிக்கு சிங்கள சிறீலங்கா காவற்துறையிருக்கு வழங்கிய பொய்முறைப்பாட்டின் அடிப்படையில் சிந்துஜன் என்ற தமிழ் தேசிய உணர்வாளர் அனுர அரசின் ஏவல் படையால் இன்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அநீதியை வன்மையாகக் கண்டிப்பதோடு பேரினவாத சிறீலங்கா காவற்துறையின் இனவாதச் செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்.