அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் இதுவரை 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை கான்சாஸ் மாகாணத்திலுள்ள Wichita நகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, விர்ஜினியாவிலுள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்துக்கு அருகே ராணுவ ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 விமான நிலைய பணியாளர்கள் உட்பட 64 பேர் பயணித்த நிலையில் அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 ராணுவ வீரர்களும் இதில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான அந்த விமானம் Potomac நதியில் விழுந்த நிலையில், உயிரிழந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
NBC நியூஸின் சமீபத்திய அறிக்கைகளின்படி, இதுவரை 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
துரதிர்ஷ்டவசமாக, அதிகாரிகள் விமானத்தின் மீதமுள்ள பயணிகளுக்காக தேடி வருகின்றனர்.
இந்த சோகமான சம்பவம் நாட்டின் தலைநகரில் ஒரு சோக நிழலைப் படியச் செய்துள்ளது.